சுமார் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட (மாஞ்சோலை) மீராவோடை கிராமிய வைத்தியசாலை தற்போது பிரதேச வைத்தியசாலையாக மாறியுள்ளது.
இதன் நிலவரம் என்ன? எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாப் பிரதேசத்தின் ஓட்டமாவடி, செம்மண்னோடை, மீராவோடை (தமிழ்), கருவாக்கேணி, மீராவோடை, பதுரியா நகர், மாஞ்சோலை, மாவடிச்சேனை உள்ளிட்ட ஏராளமான கிராம ஏழை மக்கள்
அன்றாடம் தமக்கு அவ்வப்போது ஏற்படும் நோய் நொடிகளுக்கு இலவசமாக நிவாரணம் பெற நாடி வரும் ஒரே இடம் இதுவாகும். இங்கு பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி கூறுகின்றார்.
இவ்வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய மாறி மாறி பல்வேறுபட்ட அரசியல் காரணங்களுக்காக
அபிவிருத்திக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தும், இவர்கள் செய்த உச்ச பணிகள் தான் என்னவென்பதை எமது கிராம மக்களின் சார்பாக பகிரங்கக்கேள்வியை நான் அவர்களிடம் கேட்க விரும்புகின்றேன்.
“ஒரு நாள் எமது கிராமத்தில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம். கிண்ணியாவில் நடந்த டெங்கு போன்ற ஆபத்தான கட்டங்களை எமது கிராமம் எதிர்கொண்டால், இறைவன் பாதுகாக்க வேண்டும், அவ்வாறு நடக்காமல் அல்லது சமகாலத்தில் உணவு நஞ்சாகுதல்
போன்று எமது பிரதேச பாடசாலைகளில் இவ்வாறான நிலவரம் நடந்தால், வருடாந்தம் ஏற்படும் வெள்ள அபாயம் காரணமாக அதன் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட்டால், எமது கிராமத்தின் கதி என்ன? நாம் முதலில்
...
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like
No comments:
Post a Comment