வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கமும் அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும் என மதத்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் அறுபதாவது நாளான இன்று (21) பிரார்த்தனை நிகழ்வு மற்றும் கவன ஈர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிகழ்வில் சிவஸ்ரீ ஜெகதீஸ்வர சர்மா, அருட்தந்தையர்களான ஏ.தேவதாசன், ஜோசப்மேரி மற்றும் மௌளவிகளான எச்.எம்.பவுபஸல் அமீன்,எஸ்.எம்.நிஸ்பார் ஆகியோர் கலந்துகொண்டு பிரார்த்தனைகளை நடத்தியதுடன் கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர்.
இதன்போது, கற்ற சமூகம் வீதியில் போராடிவருவதை இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்காமல் அவர்களுக்கான தீர்வினை வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like
No comments:
Post a Comment