மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு எதிராக, மேற்குவங்கத்தில் இன்று இடதுசாரி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த பந்த்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என மம்தா கூறி இருந்தார். இதனால் மேற்குவங்கத்தில் பந்த்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் இடதுசாரிகள் நடத்திய பேரணியில், பொதுமக்களுடன் மம்தாவும் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், பிரதமரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார்.
கூட்டத்தில் பேசிய அவர், 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் யார், யாருக்கு தேவைப்படுகிறது என்று கேட்டறியாமல் திடீரென்று தன்னை கடவுளாக பாவித்துகொண்ட பிரதமர் மோடி, மக்களைப்பற்றி கவலைப்படாமல் இதைப்போன்ற தடாலடி நடவடிக்கையை எடுத்துள்ளார். நான் வாழ்கிறேனா?
சாகிறேனா? என்பது பிரச்சனையல்ல. ஆனால், இந்திய அரசியலில் இருந்து பிரதமர் மோடியை விரட்டாமல் விடமாட்டேன் என்று இன்றைய நாளில் உங்கள் முன்னால் சபதமேற்கிறேன் என ஆவேசமாக பேசினார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like
No comments:
Post a Comment