பிறவ்ஸ்
கண்டி மாவட்டத்தில் கலகெதர - ஆரம்பேகட மற்றும் பூஜாபிட்டிய நீர் வழங்கல் திட்டங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (08) சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார்.
20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் கலகெதர - ஆரம்பேகட நீர் வழங்கல் திட்டம் மூலம் கந்தோயாய தொடக்கம் ஆரம்பேகட (10ஆம் கட்டை) வரையிலான பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 500 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.
ஆரம்பக்கட்ட நிதியாக 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்து நிர்மாணிக்கப்படும் பூஜாபிட்டிய நீர் வழங்கல் திட்டம் மூலம் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like






No comments:
Post a Comment