கொட்டாவி விடுவது என்பது மனிதர்கள், மிருகங்கள் என எல்லோருக்கும் பொதுவானதாகும்.
சமீபத்தில் நடந்த மருத்துவ ஆராய்ச்சியில் அதிகளவில் நீண்ட கொட்டாவி விடுபவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள் என தெரியவந்துள்ளது.
கொட்டாவி விடும் அளவை வைத்தே மூளை எவ்வளவு பெரியது என கணக்கிட முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
நீண்ட கொட்டாவி விடுபவர்கள் மனிதர்கள் தான். அவர்கள் மூளையின் எடை மூன்று பவுண்ட் ஆகும்.
மனிதர்களுக்கு அடுத்தபடியாக குதிரைகள் மற்றும் ஒட்டங்கள் நீண்ட கொட்டாவிகள் விடுகிறது.
சிறிய கொட்டாவி விடுவதில் எலி, முயல் முதலிடத்தில் உள்ளது.
மேலும், கொட்டாவி விடுவது முளையை குளிர்ச்சியாக வைத்திருக்க தான் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொட்டாவி விடும் போது தாடைகள் விரிவடைவதால் மண்டை ஓடுகளின் வேகம் அதிகரிக்கிறது.
மேலும், முளைக்கு வெளியே சூடான இரத்தத்தை அது இறைப்பதாகவும் தெரியவந்துள்ளது
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment