இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3மணியளவில் காரைதீவுகடல் 99மீற்றரளவில் ஊருக்குள் வந்துள்ளது.இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிகாலையில் மக்கள் அலறிக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினர்.
பெரியநீலாவணை பாண்டிருப்பு கல்முனை போன்ற இடங்களில் கடற்கரையிலிருந்து 100மீற்றர் தூரம் குடிமனைப்பகுதிக்குள் கடல்வந்துள்ளது. கல்முனைசுனாமி நினைவுத்தூபி பகுதியையும் தாண்டி ஊருக்கள் கடல்நீர் வந்துள்ளதாக அப்பகுதி சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.
by-karaitivunet.com
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment