அமெரிக்காவின் மேற்கு பகுதியில் பசுபிக் பெருங்கடலை ஒட்டியுள்ளது கலிபோர்னியா மாகாணாம். கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தின் பெர்ண்டேல் பகுதியில் இருந்து கடல் பகுதிக்குள் சுமார் 104 மைல் தூரத்தில் இந்த நிலநடுக்கம் நிலை கொண்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக இந்த வார தொடக்கத்தில் இதே பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment