Breaking

LightBlog

Saturday, 12 November 2016

மாத விடாய் வலியை போக்க வீட்டு தீர்வு...!


பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் வரும் பல உபாதைகள் வருவது இயற்கையானது. அதுவும் கருமுட்டை உருவாகும்போது ஒவ்வொரு மாதமும் உண்டாகும் மாதவிடாய் வலியை போக்க குறிப்புகள் இங்கே!

வயிற்று வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தலை வலி, மன உளைச்சல், சோர்வு, உடல் வலி என இந்த பிரச்சனைகளை ஒவ்வொரு பெண்ணும் மாதவிடயின் போது தாண்டாமல் வருபவர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

கர்ப்பப்பை சுற்றிலும் உள்ள த்சை இறுக்கத்தினாலே வலி உண்டாகிறது. அவ்வாறு வரும் மாத விடாய் சமயங்களில் வலிகளை போக்க இந்த குறிப்புகளை உபயோகப்படுத்திப் பாருங்கள். பலன் கிடைக்கும்.

வெந்தய நீர் :
வெந்தய நீர் :

வெந்தயத்தை முன் தின இரவு ஊற வைத்து, அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் வலி கட்டுப்படும். இறுக்கமடைந்த தசைகள் தளர்வாகும்.
இஞ்சி கருமிளகு தேநீர் :
இஞ்சி கருமிளகு தேநீர் :

தேநீர் தயாரிக்கும் போது அதில் இஞ்சியை தட்டி போட்டு கொதிக்கவிடவும். அதன் பின் வடிகட்டியவுடன் அதில் மிளகுப் பொடியை கலந்து குடித்தால் புத்துணர்வாகவும் வலி மறைந்தும் போய்விடும்.
சூடான ஒத்தடம் :
சூடான ஒத்தடம் :

சூடான நீரில் ஒத்த்டம் வயிற்றுப் பகுதிகளில் கொடுத்தால் இறுக்கமடைந்த தசைகள் ஆறுதலடைந்து தளர்வாகும். இதமாகவும் இருக்கும்.
நல்லெண்ணெய் மசாஜ் :
நல்லெண்ணெய் மசாஜ் :

இது வயிறு மற்றும் இடுப்பு வலிக்கு நல்ல தீர்வை தடும். நல்லெண்ணெயை சூடுபடுத்தி அடிவயிறில் தேய்த்தால் கர்ப்பப்பையை சுற்றி இருக்கும் சூடு குறைந்து குளிர்ச்சியாகும். இதனால் வலி குணமாகும்.
சீரகம் :
சீரகம் :

சீரகத்தை நீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க விடுங்கள். ஆறியது வடிகட்டி குடித்தால் , வயிற்றில் உண்டாகும் பாதிப்புகள் குணமாகி இதம் பெறும்.
சீமை சாமந்தி தே நீர் :
சீமை சாமந்தி தே நீர் :

சீமை சாமந்தி வலி நிவாரணியாக செயல்படுகிறது. அதிலிருக்கும் காரணிகள் கர்ப்பப்பை தளர்வ்டையச் செய்து புரோஸ்டா கிளாண்டின் சுரப்பை குறைக்கிறது. இதனால் வலியும் குறைந்துவிடும்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog