Breaking

LightBlog

Wednesday, 30 November 2016

பதவியில் இருந்து விலகுவதாக டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு...


அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தான் இதுவரை வகித்து வந்த தொழில் சார்ந்த அத்தனை பொறுப்புகள் மற்றும் பதவிகளில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டொனால்ட் டிரம்ப் உலக பணக்காரர்களில் ஒருவர் ஆவார்.

டிரம்பிற்கு உலகம் முழுவதும் பல்வேறு தொழில்கள் இருப்பதுடன் தொழில் சார்ந்த பல பொறுப்புகளையும் வகித்து வருகிறார்.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் அரசுப் பணியில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தும் வகையில் தனது சொந்த தொழிலில் ஈடுப்பட மாட்டேன்.

மேலும், தொழில் சார்ந்த பதவிகள் மற்றும் பொறுப்புகளிலும் இனி நீடிக்க மாட்டேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்வரும் டிசம்பவர் 15-ம் திகதி செய்தியாளர்களுடன் சந்திக்க உள்ளதாகவும், அப்போது அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரிய வல்லரசு நாடாக மாற்ற தேவையான எனது திட்டங்கள் பற்றி அறிவிக்க உள்ளதாக’ டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மக்களிடம் நன்றியை தெரிவிக்க நாளை முதல் நாடு முழுவதும் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog