புதுடில்லி : தினகரன் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என டில்லி குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இதனையடுத்து கடல்வழியாகவோ, விமானம் மூலமாகவோ தினகரன் தப்பிச் செல்லாமல் இருக்க போலீசார் உஷாப்படுத்தப்பட்டுள்ளனர்.
அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சென்னை எழும்பூர் கோர்ட்டில் இன்று ஆஜராக தினகரன் சென்றுள்ளார். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு தினகரன் பணம் கொடுக்க முயற்சி செய்ததை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை டில்லி போலீசார் திரட்டி
வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like



No comments:
Post a Comment