Breaking

LightBlog

Friday, 18 November 2016

அதிகமாக பகிருங்கள்: இவ்வாறு தும்மல் வந்தால் அவதானம் நண்பர்களே...


எம்மில் பலரும் ஒரு அசௌகரியமான சூழலில் ஆரோக்கிய ரீதியாக தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாதபோது அதன் பல வெளிப்பாடுகளில் முதன்மையானது தும்மல்.

அத்துடன் தும்மும் போது அதன் வேகம் குறித்து நாம் ஏற்கனவே அறிந்திருப்போம். ஆனால் ஒரு தும்மல் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பது குறித்து தெரியாது. ஆனால் தற்போது அமெரிக்காவிலுள்ள மருத்துவ விஞ்ஞானிகள் ஒரு தும்மலின் தூரத்தை நவீன கமெரா மூலம் படமாக்கி, ஒரு தும்மல் 25 அடி தொலைவு வரை பயணிக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

காற்று தவிர வேறு எந்த அந்நியப் பொருள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான், தும்மல். எமது நாசித் துவாரத்தில் சிறிய முடியிழைகள் நிறைய இருக்கின்றன. நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின் பணி.

இங்கு ஒரு மென்மையான சவ்வுப் படலமும் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்படுகிறது. உடனே அவற்றை வெளித் தள்ளும் முயற்சியில் சவ்வுப் படலம் அதிக அளவில் நீரைச் சுரக்கிறது.

இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து சுவாசப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளியேத் தள்ளுகின்றன. இதுதான் தும்மல். இப்படித் தும்மும்போது அத்துமீறி அங்கிருக்கும் அந்நியப் பொருள் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில் தும்மலின்போது வெளியேற்றப்படும் ஒரு சிறுநீர்த்துளி 20 முதல் 26 அடி வரை பயணிக்கிறது என்றும், வெளியேற்றப்படும் தூசு அல்லது துகள் 6 அடி தூரத்திற்கு வெளியேற்றப்படுகிறது என்றும்.

இவையாவும் 0.15 விநாடிக்குள் நடைபெற்று முடிந்துவிடுகிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். அதனால் இனி தும்மும் போது கைகளில் அவசியம் கைகுட்டையை வைத்துக் கொண்டு சக மனிதர்களுக்கு பரவாமல் தும்ம பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதும் இதன் மூலம் தெரியவருகிறது.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog