Breaking

LightBlog

Monday, 28 November 2016

பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர்களுடன் சென்ற விமானம் கொலம்பியாவில் விழுந்து விபத்து...


கொலம்பியா: பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 72 பேர் பயணம் செய்துள்ளனர். பிரேசில் நாட்டை சேர்ந்த ஏ பிரிவு வீரர்கள் பயணம் செய்துள்ளனர். 

இவர்கள் வரும் புதன்கிழமை அன்று மெடலினில் நடைபெறக்கூடிய கோபா காலந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக பொலியாவில் இருந்து கொலம்பியாவின் மெடலின் விமான நிலையத்துக்கு சென்ற போது விமானம் விபத்துக்குள்ளானது. 

எரிபொருள் தீர்ந்திருக்கலாம் அல்லது மோசமான வானிலை அல்லது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு  காரணமாக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் பயணம் செய்த 72 வீரர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 
by-dinakaran
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog