Breaking

LightBlog

Wednesday, 9 November 2016

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் மீண்டும் மோதல்.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில், போர்நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தானியப் படைகள், ராஜோரி மாவட்டத்திலுள்ள நவ்ஷெரா பகுதியில் தாக்குதல் நடத்தியதாக, இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்தியப் படையினரால் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, இதனால் மோதல் ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

நேற்றுக் காலை 8:45 முதல் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், இந்தத் தாக்குதல்களால், தங்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என, இந்திய இராணுவத்தினர் குறிப்பிட்டனர்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது Face Book-PAGEயை லைக் Like செய்யவும்
Like

No comments:

Post a Comment

LightBlog